sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில்; நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

/

விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில்; நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில்; நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

விழுப்புரத்தில் தடம்புரண்ட ரயில்; நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத்!

14


ADDED : ஜன 14, 2025 07:21 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:21 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு யூனிட் ரயில் ஒன்று இன்று(ஜன.14) புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதில், 6வது பெட்டி திடீரென தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம்புரண்டது.

விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். தடம்புரண்ட பெட்டியை அகற்றும் பணியில் அவர்கள் இறங்கி உள்ளனர்.

ரயில் தடம்புரண்டதால் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us