sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வ.உ.சி., நினைவு செக்கு இடம் மாற்ற வழக்கு

/

வ.உ.சி., நினைவு செக்கு இடம் மாற்ற வழக்கு

வ.உ.சி., நினைவு செக்கு இடம் மாற்ற வழக்கு

வ.உ.சி., நினைவு செக்கு இடம் மாற்ற வழக்கு


ADDED : மார் 14, 2024 02:42 AM

Google News

ADDED : மார் 14, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:வ.உ.சி., நினைவாக, கோவை சிறையிலுள்ள செக்கை ஓட்டப்பிடாரத்திலுள்ள அவரின் நினைவு இல்லத்திற்கு மாற்ற, தாக்கலான வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் குமரன் தாக்கல் செய்த பொதுநல மனு:

வ.உ.சிதம்பரனார் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசியதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு எண்ணெய் ஆட்டுவதற்கு செக்கில் காளைகளை பூட்டுவதற்கு பதிலாக இவரை இழுக்க வைத்து கொடுமைப்படுத்தினர்.

கோவை மத்திய சிறையில் அந்த செக்கு இன்றும் உள்ளது. அவரது தியாகத்தை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள பாதுகாப்பது நம் கடமை. செக்கை ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி., நினைவு இல்லத்திற்கு மாற்றக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று தமிழக தலைமைச் செயலர், துாத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us