தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?...  அந்துமணி பதில்கள்

திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?...  அந்துமணி பதில்கள்

திமுக - அதிமுக கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டதா?...  அந்துமணி பதில்கள்

11


UPDATED : செப் 18, 2026 04:46 AM

ADDED : செப் 18, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

11

UPDATED : செப் 18, 2026 04:46 AM ADDED : செப் 18, 2026 04:45 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ராஜாளி, வேலுார்:


பாரத பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்குமா?



நம் பிரதமர் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக வைத்து, 'கருமமே கண்ணாயினார்' என உத்வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்ன அமெரிக்க அதிபர் டிரம்ப் போல், 'நோபல் பரிசு வேண்டும்' என, அடமா பிடித்துக் கொண்டிருக்கிறார்?

ஜெ.மாரிமுத்து, ஈரோடு:


'தி.மு.க.,வை எதிர்த்து தான், அ.தி.மு.க., என்ற கட்சியையே எம்.ஜி.ஆர்., ஆரம்பித்தார். அத்தகைய கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முற்பட்டதால் தான், என்னுடைய எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தேன்...' என்கிறாரே, மரகதம் குமரவேல்?



அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வே சொல்கிறார் என்றால், அதில் உண்மை இருக்கத்தானே செய்யும்!

க.அன்பு, கோவை:


தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தும் அநியாயம் நியாயமா?



அவர்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளதே தற்போதைய அரசு... பார்ப்போம் கிடுக்கிப்பிடியால் பலன் ஏற்படுகிறதா என்று!

டி.ஜூலியட், கோவை:


'அரசியல் நாகரிகத்தின் உச்சம் கருணாநிதி' என்கிறாரே தி.மு.க., - ஆ.ராஜா?



கருணாநிதி உச்சம் என்றால், அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம், வெறும் மிச்சமா ஜூலியட்?

வண்ணை கணேசன், சென்னை:


'என் தலைவனை தொட்டவன் யாராக இருந்தாலும் விட மாட்டோம்' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆவேசப்பட்டுள்ளாரே?



மேயராக பதவியேற்ற புதிதில், 'ரெயின் வருது; அதனால் சாலைகளில் வாட்டர் நிக்குது' என பேசிய பிரியாவின் உண்மை முகமும், மொழியும் இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்குமே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு:


அமெரிக்காவில், முதுகலை, பிஎச்.டி., பட்டங்களைப் பெற்ற, நம் நாட்டின், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜினியர் தம்பதி, கல்விதான் தங்கள் வாழ்க்கையில் பல கதவுகளைத் திறந்தது; மற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்துக்கு, 190 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்துள்ளனரே...



அந்த இன்ஜினியர் தம்பதி, அப்படியே நம் நாட்டில் உள்ள தரமான பல்கலைக் கழகங்களுக்கும், பள்ளிகளுக்கும் உதவ முன்வரலாமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us