sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

/

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்"- சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

30


UPDATED : பிப் 22, 2024 02:57 PM

ADDED : பிப் 22, 2024 01:21 PM

Google News

UPDATED : பிப் 22, 2024 02:57 PM ADDED : பிப் 22, 2024 01:21 PM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்கிறோம்' என முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி சட்டசபையில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பா.ம.க., கோரிக்கைக்கு சாதகமாகவே தி.மு.க., அரசும் குரல் கொடுக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

வெளிநடப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

எய்ம்ஸ் போல் இல்லை

சட்டசபையில் பேசிய பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன், 'கோவையில் நூலகம் அமையும் என பட்ஜெட்டில் அறிவித்ததற்கு நன்றி. இந்த நூலகம் எப்போது, எங்கே அமையும்? இதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? பணிகள் எப்போது துவங்கும்?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ''இந்த ஆட்சி சொன்னதை செய்யும், சொல்வதைதான் செய்யும். மதுரையில் உலக தரம் வாய்ந்த நூலகம் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறதோ, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதோ, இன்னும் சில தினங்களில் கருணாநிதி நினைவகம் அமைய இருக்கிறதோ, அதேபோல சொன்னபடி நூலகம் திறக்கப்படும். வானதி சீனிவாசனுக்கு குறிப்பாக சொல்லிக்கொள்வதெனில், மதுரையில் எய்ம்ஸ் அறிவித்ததை போல் அல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் நூலகம் கட்டி முடிக்கப்படும். 2026 ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் திறக்கப்படும்'' என்று கூறினார்.



பிரதமர் விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

பிரதமர் மோடி பிப்., 28 ல் துாத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகிறார். துறைமுகத்தில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில்வே துாக்கு பாலத்தை துவக்கி வைக்கிறார். இந்நிலையில் தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் பிப்.,28ம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார்.








      Dinamalar
      Follow us