sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல: கர்நாடக துணை முதல்வர் காட்டம்

/

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல: கர்நாடக துணை முதல்வர் காட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல: கர்நாடக துணை முதல்வர் காட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல: கர்நாடக துணை முதல்வர் காட்டம்


ADDED : மார் 11, 2024 04:42 PM

Google News

ADDED : மார் 11, 2024 04:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது; தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல'' என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மாளவல்லியில் உள்ள ஷிவா நீர்த்தேக்கத்தை நிரப்புவதற்காக கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து பெங்களூருக்கு குடிநீர் தேவைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல. எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் எங்களிடம் உள்ளன. பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. தண்ணீர் பம்ப் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நீர் இருக்க வேண்டும். இதனால் அந்த அளவை பராமரிக்க தண்ணீர் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us