sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்

/

காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்

காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்

காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்

37


UPDATED : பிப் 13, 2026 03:34 PM

ADDED : பிப் 07, 2026 08:54 PM

Google News

37

UPDATED : பிப் 13, 2026 03:34 PM ADDED : பிப் 07, 2026 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடியாத்தம்: ''முன்னாள் முதல்வர் காமராஜரால் முடியாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்தோம்,'' என தமிழக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்தானாவில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மோர்தானா அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படும். நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; அதில் சந்தேகமே வேண்டாம். மற்ற வர்கள் நீரின் மேலே நடந்தாலும், நெருப்பின் மேலே நடந்தாலும், எங்கள் ஆட்சி தான் மீண்டும் அமையும். மோர்தானா அணை என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.

முன்னாள் முதல்வர் காமராஜர், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்து முதல்வரானார். அப்போது, மோர்தானா அணையை கட்ட முயன்றார். ஆனால், நிதி இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதன் பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்து தான், அதை கட்டினோம்; 90 அணைகளை கட்டியுள்ளோம்.தமிழகத்தில் இனி அணைகளே கட்ட தேவையில்லை எனும் அளவுக்கு போதிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us