sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்

/

 எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்

 எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்

 எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்

3


ADDED : டிச 13, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:50 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: கர்நாடகா, கேரள மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் ஏன் செய்யக்கூடாது? அனைத்து சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டால், அந்த பெருமை, முதல்வர் ஸ்டாலினையே சேரும். ஆனால், முதல்வர் ஏன் இதை செய்ய தயங்குகிறார்?

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து, அதன்படி இட ஒதுக்கீடு கொடுத்தால், அது உங்களுக்கு தான் நன்மை. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; அதன்படி, இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்.

பா.ம.க., என்றால் ஒரே கட்சி தான். அது, இது என ஏதாவது சொல்லி ஏமாற்றுவர். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். எங்களுக்கு வேஷம் போடத் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்ரீ காந்தி பேசுகையில், ''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான் நம் ஒரே தலைவர். மாறாக, நான் தான் தலைவர், நான் தான் தலைவி என கூறி, 100 நாட்கள் சொகுசு பயணம் புறப்படுபவர்கள் மத்தியில், கிராமங்கள்தோறும் நடந்தே சென்று கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.

''அவரை மறந்துவிட்டு, இப்போது கட்சியை பிளவுபடுத்தி வருகின்றனர். கட்சியை உருவாக்கியபோது சீனில் இல்லாதவர்கள், இப்போது நாங்கள் தான் கட்சி என்று 'சீன்' போடுகின்றனர்,'' என்றார்.

திடீர் சாலை மறியல்

ராஜரத்தினம் மைதானம் அருகே, சாலையின் ஒருபுறம் ஆர்ப்பாட்டம் நடந்தது; மற்றொரு புறம், வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடுமாறு போலீசாருக்கு கோரிக்கை விடுத்தார். இருப்பினும், கூட்டம் குறைவாக இருந்ததால், அந்த சாலையில் வாகனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.



குறைந்த அளவே கூடிய கூட்டம்

ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பா.ம.க.,வினர் வந்தனர். இருப்பினும் கூட்டம் சேரவில்லை; காலி இருக்கைகளே தென்பட்டன. ராமதாஸ் பேசும்போது, தொண்டர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். வழக்கமாக குறித்த நேரத்துக்கு வரும் ராமதாஸ், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் குறைவாக இருந்ததால், இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததாக பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us