எம்.ஜி.ஆர்., புகழைப் போற்றி வணங்குகிறோம்: அண்ணாமலை
எம்.ஜி.ஆர்., புகழைப் போற்றி வணங்குகிறோம்: அண்ணாமலை
ADDED : ஜன 17, 2025 09:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தலைசிறந்த தேசியவாதியான எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றி வணங்குகிறோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த தினம் இன்று. விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர்.
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர். சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான எம்.ஜி.ஆர்., புகழைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.