sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விரைவில் இயல்புநிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

/

விரைவில் இயல்புநிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

விரைவில் இயல்புநிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

விரைவில் இயல்புநிலையை மீட்டெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

17


ADDED : டிச 02, 2024 11:23 AM

Google News

ADDED : டிச 02, 2024 11:23 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவாரணம் மற்றும் மீட்டு பணிகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில், கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதியில் மழை மற்றும் புயல் காரணமாக சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்யும் இடத்தில் நடைபெற்ற பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, விழுப்புரம் மந்தவாய்புதுக்குப்பம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அவர், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 'மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட கலெக்டர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பெஞ்சல் புயலால், தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us