ADDED : ஜன 31, 2026 06:50 AM

சென்னை: ''மக்களுக்காக மக்களுக்குரிய தேர்தல் அறிக்கையை தயாரித்து, அதை நிறைவேற்றுவது பா.ஜ., மட்டுமே,'' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அறிக்கை தயாரிக்க, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக மக்களிடம் கருத்து கேட்க, 'மக்களுக்காக மக்களிடமிருந்து' இயக்கத்தை, சென்னை அமைந்தகரையில் நேற்று, மத்திய அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.
இதன் வாயிலாக, கருத்து சேகரிக்கும் பெட்டிகளுடன், 38 வாகனங்கள், எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:
தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது, பா.ஜ.,வின் வழக்கம். எந்த ரூபத்திலாவது, தேர்தல் அறிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவோம்.
மகளிர், இளைஞர் என, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரித்து, அதை பா.ஜ., நிறைவேற்றும். அனைவரும் இணைந்து, ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

