sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

17 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

/

17 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

17 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

17 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை


ADDED : அக் 04, 2024 06:43 AM

Google News

ADDED : அக் 04, 2024 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வடக்கு வங்கக்கடல் பகுதியில், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.

இந்திய வானிலை துறை அறிக்கை:

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இந்த மாநிலங்களில் அடுத்த சில நாட்களில், முழுமையாக விலகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

தென்கிழக்கு வங்கதேசம், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளி மண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக, வடக்கு வங்கக்கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்பத்துாரில் 9 செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது.

குமரிக்கடல் உள்ளிட்ட பகுதியில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது லட்சத்தீவு பகுதிகளில் காணப்படுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு, கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம்,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துார், திருச்சியில் இன்று கனமழை பெய்யும்.புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலுார், மயிலாடுதுறை, விழுப்புரம், கோவையில் நாளை கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.








      Dinamalar
      Follow us