/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாம்பரம்-ராமேஸ்வரம் ரயிலுக்கு வரவேற்பு
/
தாம்பரம்-ராமேஸ்வரம் ரயிலுக்கு வரவேற்பு
ADDED : மார் 18, 2026 04:46 AM

பண்ருட்டி: பண்ருட்டியில், தாம்பரம்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பண்ருட்டியில், ரயில் சங்கம் சார்பில், தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல பா.ஜ., செயலாளர் அஸ்வத்தாமனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பேரில் தாம்பரம்- ராமேஸ்வரம் ரயில், பண்ருட்டியில் இரவு 9:04க்கும்; ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் இரவு 11:49 மணிக்கும், வந்து நின்று செல்லும் என, ரயில்வே வாரியம் கடந்த வாரம் அறிவித்தது.
அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 9:03 மணிக்கு தாம்பரம்- ராமேஸ்வரம் ரயில், பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
ரயிலுக்கு பண்ருட்டி ரயில் உபயோகிப்பாளர்கள் நலசங்க தலைவர் சுபாஷ், துணை தலைவர் அருணாசலம், பொருளாளர் நரேஷ், பா.ஜ., வர்த்தக பிரிவு அசோக்ராஜ், ஆர்.எஸ்.எஸ்., நாராயணன், காங்., பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், வக்கீல் குமரன் உள்ளிட்டோர் மலர் துாவி வரவேற்று இனிப்பு வழங்கினர்.
பண்ருட்டி வந்த பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமனை சந்தித்து சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

