sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விசாரணைக்கு சென்றவர் மரணம்

/

விசாரணைக்கு சென்றவர் மரணம்

விசாரணைக்கு சென்றவர் மரணம்

விசாரணைக்கு சென்றவர் மரணம்


ADDED : ஆக 13, 2011 01:34 AM

Google News

ADDED : ஆக 13, 2011 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

xகோபிசெட்டிபாளையம் : போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமாக இறந்ததால், கோபியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி வண்டிபேட்டையை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 30; ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள கேன்டீனில், வேலை செய்தார். இவரது மனைவி ஷீலா. சூர்யா, 11, சஞ்சய், 7, ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.



நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் சலீம், 40, சமரசம் செய்தார். இதில், கணேசமூர்த்திக்கும், சலீமுக்கும் இடையே தகராறு முற்றியதில், கணேசமூர்த்தியை சலீம், கத்தியால் குத்தினார். கோபி அரசு மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார்.



கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, சலீமை அழைத்துச் சென்ற போலீசார், விசாரணை நடத்திய போது, மயக்கமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறவே, அரசு மருத்துவமனையில் இருந்த போலீசார் அங்கிருந்து மாயமாகினர். கோவை டி.ஐ.ஜி., - ஈரோடு எஸ்.பி., ஆகியோர், நள்ளிரவில் கோபியில், பொதுப்பணித் துறை ஓய்வு மாளிகையில், கோபி போலீசாருடன், ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சலீமின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



'கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு சலீமை, அவரது மனைவி சாகீரா மற்றும் உறவினர்கள் அழைத்து வரும் போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்தார்' என, கோபி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், சலீமின் உறவினர்களோ, 'விசாரணைக்காக, சலீமை ஆட்டோவில் போலீசார் அழைத்து சென்றனர். ஸ்டேஷனில் அவர் இறந்து விட்டார்' என கூறுகின்றனர்.








      Dinamalar
      Follow us