sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

/

உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

20


UPDATED : மே 01, 2025 03:50 PM

ADDED : மே 01, 2025 03:43 PM

Google News

UPDATED : மே 01, 2025 03:50 PM ADDED : மே 01, 2025 03:43 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எப்படி வெற்றி இது? என ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வரின் கருத்துக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு வசதிகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிரசும் திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரம் இருந்தபோது தி.மு.க.,காங்கிரஸ் இதனை செய்யவில்லை.

சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். caste census வேறு caste survey வேறு. கேஸ்ட் சர்வே தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க Caste Survey அவசியம். அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இது எங்களுக்கு தான் வெற்றி. உங்களுக்கு எப்படி வெற்றி இது? உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? என்னனே தெரியாமல் ஆளும் கட்சியினர் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அன்புமணி கூறினார்.






      Dinamalar
      Follow us