sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தம்பி கைதாகும்போது தி.மு.க., குடுமி சிக்கும்'

/

'தம்பி கைதாகும்போது தி.மு.க., குடுமி சிக்கும்'

'தம்பி கைதாகும்போது தி.மு.க., குடுமி சிக்கும்'

'தம்பி கைதாகும்போது தி.மு.க., குடுமி சிக்கும்'

14


ADDED : மே 18, 2025 03:30 AM

Google News

ADDED : மே 18, 2025 03:30 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில், இரண்டாவது நாளாக நடக்கும் அமலாக்கத் துறை சோதனை நடத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்?' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.

அ.தி.மு.க., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட இடங்களில், அமலாக்க துறையின் சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்த சோதனை குறித்து, இன்னும் முதல்வர் ஸ்டாலின் ஏதும் கூறாமல் மவுனமாக இருக்கிறார்; இது ஏன்?

தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் 'ரெய்டு' பற்றி ஏன் பேச மறுக்கிறார்; ரித்தீஷ் எங்கே இருக்கிறார்; துபாய் சென்று விட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரித்தீஷ்?

முதல்வராலும், அவரது மகனாலும், 'தம்பி' என்று அன்போடு அழைக்கப்படும் ரித்தீஷின் வேலை என்ன? 'யார் அந்த சார்?' என்று கேட்டோம்-, பதில் வரவில்லை. யார் அந்த தியாகி? என்று கேட்டோம்; தமிழகத்திற்கே தெரிந்த பதில் என்றாலும், முதல் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி; எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்? இந்த தம்பி கைதாகும்போது, தம்பியின் வசம் உள்ள தி.மு.க.,வின் குடுமி சிக்கும். அப்போது பேசித்தானே ஆக வேண்டும் முதல்வரே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us