ADDED : ஜூலை 04, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு கூட தகவல் தெரிவிக்காமல், டி.எஸ்.பி.,க்கு, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த அதிகாரி யார் என்பதை, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக காவல் துறையை சீர்திருத்த, இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்.