எல்லாவற்றையும் நான் செய்வதற்கு நீங்கள் ஏன் முதல்வராக இருக்கணும்: ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
எல்லாவற்றையும் நான் செய்வதற்கு நீங்கள் ஏன் முதல்வராக இருக்கணும்: ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
ADDED : நவ 26, 2025 06:41 PM

சென்னை: '' எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கீங்க?'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரோட்டில் மேடை ஏறிய முதல்வர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது, எது நடந்தாலும் 'ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்' என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல்.
கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட பிரதமர் மோடியை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன் நான்.
எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும்' என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட்டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார்.
உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது.
அதிமுக எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று!ரெய்டு வந்ததும் டில்லிக்கு பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா
நான் எப்போதும் தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்! ஆனால், ஒரே ஒரு கேள்வி- எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கீங்க? இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

