sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 திருமாவளவனை ராஜா விமர்சித்தது ஏன்?

/

 திருமாவளவனை ராஜா விமர்சித்தது ஏன்?

 திருமாவளவனை ராஜா விமர்சித்தது ஏன்?

 திருமாவளவனை ராஜா விமர்சித்தது ஏன்?

25


ADDED : ஜன 24, 2026 05:34 AM

Google News

25

ADDED : ஜன 24, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: கடந்த சில நாட்களுக்கு முன், பெரம்பலுாரில் வி.சி., கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், வரும் சட்டசபை தேர்தலில், பெரம்பலுார் தனி தொகுதி யில் வி.சி.,க்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தலின்படியே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது, பெரம்பலுாரைச் சொந்த ஊராகக் கொண்ட தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு பிடிக்கவில்லை.

இதுகுறித்து, பெரம்பலுார் மாவட்ட வி.சி., கட்சியினர் கூறியதாவது:

பெரம்பலுார் தனி தொகுதியில், தன் குடும்பத்திலிருந்தோ, கட்சியில் தன் ஆதரவாளர் ஒருவரையோ போட்டியிட வைத்து, எம்.எல்.ஏ.,வாக்க வேண்டும் என ராஜா திட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில், வி.சி., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானம் போட்டதும், ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த கோபத்திலேயே, திருமாவை ஜாதி கட்சி தலைவர் என விமர்சித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us