sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றது ஏன்?: வாலிபர் வாக்குமூலம்

/

கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றது ஏன்?: வாலிபர் வாக்குமூலம்

கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றது ஏன்?: வாலிபர் வாக்குமூலம்

கருணாநிதி நினைவிடத்தில் குண்டு வீச முயன்றது ஏன்?: வாலிபர் வாக்குமூலம்

15


ADDED : மே 13, 2025 05:07 AM

Google News

ADDED : மே 13, 2025 05:07 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழி தீர்க்கும் விதமாக, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக, போலீசாரிடம் சிக்கிய வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன், 26. இவர் நேற்று முன்தினம், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முத்துச்செல்வன் அளித்த வாக்குமூலத்தில், 'துாத்துக்குடியில் இருந்து பஸ்சில் சென்னைக்கு வந்தேன். நான் புத்தகங்கள் வாயிலாக, இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழிவாங்கும் விதமாக, கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றேன்' என, கூறியுள்ளார்.

போலீசார் கூறுகையில், 'முத்துசெல்வன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார். மன நலமும் பாதிக்கப்பட்டு உள்ளார். அதனால், கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அரசு மன நல மருத்துவனையில் சேர்க்க உள்ளோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us