sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிராமசபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம்? அமைச்சரிடம் பா.ஜ., பெண் நிர்வாகி கேள்வி

/

கிராமசபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம்? அமைச்சரிடம் பா.ஜ., பெண் நிர்வாகி கேள்வி

கிராமசபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம்? அமைச்சரிடம் பா.ஜ., பெண் நிர்வாகி கேள்வி

கிராமசபை கூட்டம் எனக்கூறி ஏன் ஆர்ப்பாட்டம்? அமைச்சரிடம் பா.ஜ., பெண் நிர்வாகி கேள்வி

26


ADDED : மார் 30, 2025 04:21 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:21 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காததை கண்டித்து, நேற்று அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மொத்தம் 1,170 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் ஊராட்சி அலுவலகம் முன், வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் முடியும் நேரத்தில், பாலவநத்தத்தைச் சேர்ந்த வடக்கு ஒன்றிய பா.ஜ., துணைத் தலைவர் மீனா, அமைச்சரிடம், 'இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அறிவிக்கப்பட்டதை ஏன் ஆர்ப்பாட்டமாக நடத்துறீங்க?' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர், ''கிராம சபை கூட்டம் 11:00 மணிக்கு மேல் தான் நடக்கும்,'' என கூறிவிட்டு சென்றார். அங்கிருந்த பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன், '100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது' என, உரத்த குரல் எழுப்பினார்.

போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

தி.மு.க., மோசடி நாடகம்!

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:விருதுநகர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் எனக்கூறி மக்களை வரச்சொல்லி, தி.மு.க., நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க, அமைச்சர் ராமச்சந்திரன் முயற்சித்திருக்கிறார். அருப்புக்கோட்டை பா.ஜ., வடக்கு ஒன்றிய துணைத்தலைவர் மீனா, இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அமைச்சர் அங்கிருந்து சென்றிருக்கிறார்.நான்கு ஆண்டுகளில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், மத்திய அரசு, நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு 39,339 கோடி ரூபாய் வழங்கி உள்ளதை, தமிழக மக்கள் அறிவர். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விபரங்களை, தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம், மத்திய அமைச்சர் பார்லிமென்டில் தெளிவாகக் கூறியிருக்கிறார்.அந்த நிதி என்ன ஆனது என்பதை கூறாமல் தி.மு.க., மோசடி நாடகமாடுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில், தி.மு.க., ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்து, பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் அக்கட்சியின் அரசியல் நாடகங்களை, தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us