sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிடைக்குமா வட்டி மானியம்? தொழில் முனைவோர் காத்திருப்பு

/

கிடைக்குமா வட்டி மானியம்? தொழில் முனைவோர் காத்திருப்பு

கிடைக்குமா வட்டி மானியம்? தொழில் முனைவோர் காத்திருப்பு

கிடைக்குமா வட்டி மானியம்? தொழில் முனைவோர் காத்திருப்பு


ADDED : அக் 10, 2025 12:09 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு, 6 சதவீத வட்டி மானியம் வழங்க, அரசின் அனுமதிக்கு இரு மாதங்களாக, 'டிக்' நிறுவனம் காத்திருக்கிறது. இது, தொழில் முனைவோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும், 'டிக்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது.

இந்நிறுவனம் வழங்கும் மொத்த கடனில், 90 சதவீதம் வரை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தான் வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் வரை, அந்த பிரிவுக்கான கடனில், 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது.

இதன் வாயிலாக, கடன் வாங்கியவர்கள், தவணை தொகையை சரிவர செலுத்தினால், ஆண்டின் முடிவில் மொத்தமாக செலுத்திய வட்டியில், 6 சதவீதம் அசலில் வரவு வைக்கப்பட்டது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் செலவானது.

இரு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வட்டி மானியத்தை மீண்டும் செயல்படுத்துமாறு, தொழில் முனைவோர், 'டிக்' நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, 6 சதவீத வட்டி மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டு, இரு மாதங்களுக்கு முன் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:

மீண்டும், 6 சதவீத வட்டி மானியம் வழங்குமாறு, 'டிக்' நிறுவனத்திற்கு தொழில் நிறுவனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இரு மாதங்களாகியும் அரசு அனுமதி தராமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us