sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 நாடு முழுதும் 500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா என்.எம்.சி.,?

/

 நாடு முழுதும் 500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா என்.எம்.சி.,?

 நாடு முழுதும் 500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா என்.எம்.சி.,?

 நாடு முழுதும் 500 மருத்துவ படிப்பு இடங்கள் காலி; மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தருமா என்.எம்.சி.,?

5


ADDED : நவ 26, 2025 06:07 AM

Google News

5

ADDED : நவ 26, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாடு முழுதும் காலியாக உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவ படிப்பு இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதிக்காக மாநில அரசுகள் காத்திருக்கின்றன.

தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,600 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,583 பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவ படிப்புக்கான இடங்களும் உள்ளன.

நிர்வாக ஒதுக்கீட்டில், 1,736 எம்.பி.பி.எஸ்., 530 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளில் சேர, 72,194 பேர் தர வரிசை பட்டியலில் தகுதி பெற்றனர். இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி கவுன் சிலிங் நடத்தப்பட்டது.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், https://tnmedicalselection.net என்ற இணைய தளத்தில் நடந்தது.

இதுவரை நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், 25 எம்.பி.பி.எஸ்., மற்றும் 23 பி.டி.எஸ்., என, 48 இடங்கள் காலியாக உள்ளன.

இதில், சென்னை மற்றும் சிதம்பரத்தில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில், மூன்று பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிலும் ஒரு பி.டி.எஸ்., இடம் நிரம்பாமல் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:


நாடு முழுதும், 1.12 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்தும், 500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக கூறப் படுகிறது.

இதில், தமிழகத்தில் மட்டும், 48 இடங்கள் நிரம்பமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப என்.எம்.சி., அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைக்காத பட்சத்தில் இவ்விடங்கள் நிரப்பப்படாமல் விடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us