sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டப்படிப்பில் சேருவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டதால் பிளஸ் 2 முடித்தோருக்கு பாதிப்பு?

/

பட்டப்படிப்பில் சேருவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டதால் பிளஸ் 2 முடித்தோருக்கு பாதிப்பு?

பட்டப்படிப்பில் சேருவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டதால் பிளஸ் 2 முடித்தோருக்கு பாதிப்பு?

பட்டப்படிப்பில் சேருவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டதால் பிளஸ் 2 முடித்தோருக்கு பாதிப்பு?


ADDED : அக் 04, 2025 08:25 PM

Google News

ADDED : அக் 04, 2025 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,:தமிழக கலை அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்புகளில், 40 வயது வரை சேரலாம் என, தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2 முடித்து வரும் மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களில் வாய்ப்புகள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில், 1,626 கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர, வயது வரம்பாக பொது பிரிவினருக்கு, 21 வயதும், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக, மூன்று ஆண்டுகள் தளர்வுடன், 24 வயதும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நி லையில், தற்போது சேர்க்கை வயது, 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும், ஐந்து ஆண்டுகள் வயது தளர்வும், பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டு முதலே அமலுக்கு வந்துள்ளது.

உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்கள், கல்வியை தொடர வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பினும், இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் வீரமணி கூறியதாவது:

உயர்கல்வி வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. ஆனால், அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், முன்னணி அரசு உதவி பெறும் தனியார் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது.

நல்ல மதிப்பெண் பெற்றும், பல மாணவர்கள் ஐ.டி., - பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில் சேர முடியாமல் இருக்கின்றனர். இனி, பிளஸ் 2 முடித்து வரும் மாணவர்களுக்கு முக்கிய கல்லுாரிகள், பாடப்பிரிவுகளில் வாய்ப்பு பறிபோகும்.

இதற்கு சரியான வழிகாட்டுதல் வெளியிட வேண்டும். சேர்க்கை முடிந்த பின், காலியாக உள்ள இடங்களில் வயது முதிர்ந்தவர்களை சேர்க்கலாம். இவர்களுக்கு, தொலைதுார பிரிவில் கல்வியை தொடரவும் பல வாய்ப்புகள் உள்ளன. சரியான வரையறைகளை வெளியிட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us