sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?

/

சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?

சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?

சனிக்கிழமை பத்திரப்பதிவுக்கு ரூ.1000 சிறப்பு கட்டணம் ரத்தாகுமா?


ADDED : பிப் 08, 2026 10:50 PM

Google News

ADDED : பிப் 08, 2026 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது சிறப்பு நிருபர்

தமிழகத்தில் 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் தான் பத்திரப்பதிவு நடந்து வந்தது.

ஆனால் விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதிக ஆவணங்கள் தாக்கலாகும் 100 அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என பதிவுத்துறை 2021ல் அறிவித்தது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக பிற அலுவலங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை அரசு பரிசீலித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களில் சொத்து பத்திரம் மட்டுமல்லாது பிற பத்திரங்களையும் பதிய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சார் பதிவாளர்கள் கூறியதாவது: சனிக்கிழமைகளில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து வகை பத்திரங்களுக்கும் தலா 1000 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சொத்து பத்திரங்களை பதிவு செய்ய வருவோருக்கு இது பெரிய சுமையாக தெரியாது.

ஆனால் வங்கியில் ஆவண வைப்பு அடமானம் முடிப்பு தொடர்பான பத்திரங்கள், திருமண பதிவுகள் போன்ற பணிகளும் சனிக்கிழமைகளில் நடக்கின்றன. இதற்கான அடிப்படை கட்டணங்கள் 50 அல்லது 100 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளன.

சனிக்கிழமைகளில் இந்த பணிகளுக்கும் 1000 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஊரக பகுதி மக்களின் நிலையை கருத்தில் வைத்து இந்த கட்டணத்தை நீக்க வேண்டும் என மேலதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us