sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 சீட்டு கொடுத்தால் தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா? திருமாவுக்கு நயினார் கேள்வி

/

2 சீட்டு கொடுத்தால் தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா? திருமாவுக்கு நயினார் கேள்வி

2 சீட்டு கொடுத்தால் தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா? திருமாவுக்கு நயினார் கேள்வி

2 சீட்டு கொடுத்தால் தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா? திருமாவுக்கு நயினார் கேள்வி

15


ADDED : ஜூன் 21, 2025 12:46 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:46 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: ''தி.மு.க., இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?'' என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திருமால் நகரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி தமிழை வைத்து தமிழக அரசு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் பிரதமர் மோடி.

தி.மு.க., கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். கூட்டணியில் சீட்டு குறித்து பிரச்னை இல்லை. கூட்டணியில் தொடர்வோம் என திருமாவளவன் சொல்கிறார். அப்படி என்றால் ஏதோ பிரச்னை உள்ளது என்பதை காட்டுகிறது. தி.மு.க., இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?

நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் பத்து மாத கால அவகாசம் உள்ளது. பா.ஜ., கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் வரப்போகிறது. ஆளுங்கட்சி தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து உள்ளது என்பதை தெளிவுபடுத்தி ஓட்டு கேட்க வேண்டும்.

ஆனால் எதிர்க்கட்சியின் கூட்டணி குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது புலி வருது புலி வருது என சொல்வதை போல் உள்ளது. பிரதமர் வந்து தமிழகத்தில் பார்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பார்த்துக் கொள்வார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us