ADDED : பிப் 28, 2026 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமதாஸ் தரப்பில், பா.ம.க., சின்னம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில், தொடர்ந்த வழக்கை, திரும்பப் பெற்றுள்ளனர். அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் பின்னடைவு ஏற்படும் என பயந்து விட்டனர். வழக்கிற்காக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ராமதாஸ் கையெழுத்தை மோசடியாக போட்டுள்ளனர். அதை ஆட்சேபித்து, குற்ற நடவடிக்கை எடுக்க கோரி, ஆவணத்தையும் தாக்கல் செய்துள்ளோம். இந்த விஷயம் வெளியில் வந்தால் அசிங்கம் என்பதால், அவசரமாக வழக்கை திரும்ப பெற்றுள்ளனர்.
- பாலு
தலைவர், வழக்கறிஞர் பிரிவு, பா.ம.க.,

