sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாக்டர் வீட்டில் 9 சவரன் நகை திருடிய பெண் கைது

/

டாக்டர் வீட்டில் 9 சவரன் நகை திருடிய பெண் கைது

டாக்டர் வீட்டில் 9 சவரன் நகை திருடிய பெண் கைது

டாக்டர் வீட்டில் 9 சவரன் நகை திருடிய பெண் கைது


ADDED : ஜன 15, 2024 06:59 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஜிப்மர் டாக்டர் வீட்டில் 9 சவரன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் மேரி ஸ்டீபன், 30; ஜிப்மர் மருத்துவமனை சீனியர் டாக்டர். இவரது மனைவி ஜெயஸ்ரீயும் அதே மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

இருவரும் வேலைக்கு செல்வதால், தங்களது 1 வயதுடைய மகனை பராமரிக்க முத்திரையர்பாளையம், கம்பன் வீதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வேலைக்கு வைத்தனர். இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த அக். 24ம் தேதி குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாடினர். அப்போது, பீரோவில் இருந்து குழந்தையின் நகையை எடுத்தபோது, ஒரு நகை காணாமல் போய் இருந்தது.

அதே போன்று, நகை பெட்டியில் வைத்திருந்த பிரேஸ்லெட், செயின், மோதிரம் என 9 சவரன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக கவிதா வேலைக்கு வரவில்லை. ஆனாலும், குழந்தையை பாசமாக கவனித்து வந்ததால், கவிதா மீது, டாக்டர் தம்பதிக்கு சந்தேகம் வரவில்லை. இருந்தும், நகை மாயமானது குறித்து குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், கவிதாவின் கணவர் மதன், டாக்டர் மேரி ஸ்டீபனை தொடர்பு கொண்டு, 'உங்கள் வீட்டில் நகைகளை எனது மனைவி திருடி அடகு வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது' என தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரிக்க சென்றபோது, கவிதா வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, கோரிமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து கவிதாவை கைது செய்து, 2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கவிதாவை நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கணவரின் நேர்மை

கவிதாவின் கணவர் மதன் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். தன் மனைவி நகை திருடியதை அறிந்து வருத்தப்பட்ட மதன், ஏற்கனவே தான் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், மனைவி திருடிய நகையால் மேலும் பாவம் வந்து சேரும் என நினைத்து ஜிப்மர் டாக்டரை தொடர்பு கொண்டு மனைவியின் செயலை தெரிவித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us