sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

/

சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

11


UPDATED : டிச 16, 2024 11:44 AM

ADDED : டிச 16, 2024 11:31 AM

Google News

UPDATED : டிச 16, 2024 11:44 AM ADDED : டிச 16, 2024 11:31 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Image 1357273உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு முதல் முறையாக, இன்று (டிச.,16) சென்னை திரும்பிய குகேஷ்க்கு தமிழக அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Image 1357274

சென்னை கலைவாணர் அங்கத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு நாளை (டிச.,17) பாராட்டு விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு தரப்பில், குகேஷக்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Image 1357275Image 1357276Image 1357277

மகிழ்ச்சி

விமான நிலையத்தில் நிருபர்களுக்கு குகேஷ் அளித்த பேட்டி: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. டிங் லிரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல, சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us