மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: வானிலை மையம்
மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: வானிலை மையம்
ADDED : அக் 15, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று(அக்.,14) இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று(அக்.,15) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் 'மஞ்சள் அலர்ட்' விடுத்துள்ளது.

