sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

‛மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்'

/

‛மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்'

‛மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்'

‛மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்'

8


ADDED : ஏப் 28, 2025 02:06 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 02:06 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன் 4ல் விண்ணப்பிக்கலாம்,” என, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதுாரில், கனவு இல்ல திட்ட பணிகளுக்கு உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று பேசியதாவது:

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.

Image 1411157


பழமையான தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்வதற்கும், முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் கிடையாது.

மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும், ஒருசிலர் விடுபட்டிருக்கின்றனர். அப்படி உள்ளவர்களுக்கு முதல்வர் ஒரு வாய்ப்பு தருகிறார். ஜூன் 4ம் தேதி மனுக்கள் வாங்க சொல்லி இருக்கின்றனர். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us