ADDED : பிப் 04, 2025 07:02 PM

சென்னை:''சீமானுக்கு நான் பதில் சொல்வதே இல்லீங்க,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்ற என்.சி.சி., மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று நடந்தது. என்.சி.சி., மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி, உதயநிதி கவுரவித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இருந்து, 120க்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள், டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அவர்கள் விமானத்தில் சென்று வர, 28 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். அவர்களுக்கு அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை சைதாப்பேட்டையில், ஈ.வெ.ரா., சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'இது பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண்ணுதான்' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது குறித்த கேள்விக்கு, “அவருக்லெ்லாம் நான் பதில் சொல்வதே கிடையாதுங்க,'' என்றார் உதயநிதி.