sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தலை ஒட்டி பிறந்த சகோதர, சகோதரி: 50வது பிறந்த நாளை கொண்டாடி உற்சாகம்

/

தலை ஒட்டி பிறந்த சகோதர, சகோதரி: 50வது பிறந்த நாளை கொண்டாடி உற்சாகம்

தலை ஒட்டி பிறந்த சகோதர, சகோதரி: 50வது பிறந்த நாளை கொண்டாடி உற்சாகம்

தலை ஒட்டி பிறந்த சகோதர, சகோதரி: 50வது பிறந்த நாளை கொண்டாடி உற்சாகம்


ADDED : செப் 18, 2011 01:15 AM

Google News

ADDED : செப் 18, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: டாக்டர்களின் ஊகங்களை முறியடித்து, தலை ஒட்டிப் பிறந்த, ஆண், பெண் இரட்டையர்கள் தங்கள், 50வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினர்.ஜார்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண், பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர்.

பிறக்கும் போதே, இருவரது தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும், மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன.இதனால், மருத்துவ வசதிகள் அதிகமாக முன்னேறாத அக்காலத்தில், இந்த விசித்திரமான பிறவிகள், நீண்ட நாள் வாழ முடியாது என, டாக்டர்கள் கைவிரித்து விட்டனர்.ஆனால், டாக்டர்களின் ஊகங்களை முறியடித்து, இவர்கள் தற்போது தங்களது, 50வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.

இந்தக் கொண்டாட்டத்தை லண்டனில் நிகழ்த்தியுள்ள இவர்களில், லோரி ஐந்தடி 1 அங்குல உயரமும், ஜார்ஜ் நான்கடி 4 அங்குல உயரமும் கொண்டவர்களாக தற்போது உள்ளனர்.ஜார்ஜ் மேற்கத்திய இசைப் பாடகராகத் திகழ்கிறார். லோரி 'டென் பின் பவுலிங்' என்ற விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். வாழ நினைத்தால் வாழலாம் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.



தங்களது வாழ்க்கை குறித்து, 'டெய்லி மெயில்' பத்திரிகைக்கு லோரி அளித்த பேட்டி ஒன்றில், 'நாங்கள் பிறந்த போது, எங்களது வாழ்க்கை மிஞ்சிப் போனால், 30 ஆண்டுகளைத் தாண்டாது என்று கூறினர். ஆனால், அவர்களின் ஊகங்கள் தவறு என்று, நாங்கள் நிரூபித்து விட்டோம். கடந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கையில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து முடிப்போம்' என்று பெருமிதத்துடன் கூறினார்.








      Dinamalar
      Follow us