ADDED : ஆக 16, 2011 04:58 AM
காட்மாண்டு: நேபாள பிரதமர் ஜலால் நாத் கனால் தனது பதவியை ராஜினாமா செய்
தார்.
கடந்த 2008-ம் ஆண்டு நேபாள நாட்டில் பொது தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமரை தேர்ந்தெஐடுப்பதில் இழுபறி நிலை நீடித்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஜலால் நாத் கனால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த மாவோயிஸ்ட்டுகள் கட்சி மற்றும் எதிர்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி ஆகியவை நாட்டில் அமைதி ஏற்படுத்து வதற்கான எந்தஒரு முயற்சியையும் பிரதமர் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியது. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுகிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வரும் 21-ம் தேதிக்குள் புதிய அரசு அமைய வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ராம் பரண் யாதவ்கெடு நிர்ணயித்துள்ளார்.

