ADDED : செப் 14, 2011 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்திற்கு, வெளிப்புறப் பகுதியில் உள்ள மடானி என்ற இடத்தில் பள்ளியில் இருந்து, குழந்தைகளை ஏற்றிக் கொண்டு திரும்பி வந்த வாகனத்தை வழியில் பயங்கரவாதிகள் சிலர் தடுத்து நிறுத்தி, கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் மூன்று குழந்தைகள், ஓர் ஆசிரியை, வாகன ஓட்டுனர் என ஐந்து பேர் பலியாயினர்.முதன்முறையாக பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் பொதுமக்கள் அரசுக்கு ஆதரவான செயல்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என, பயங்கரவாதிகள் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.