உக்ரைன் விவகாரத்தில் இந்தியா- சீனா முக்கிய பங்கு: இத்தாலி பிரதமர் வலியுறுத்தல்
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா- சீனா முக்கிய பங்கு: இத்தாலி பிரதமர் வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2024 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீவ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா - சீனா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அரசு முறைப்பயணமாக உக்ரைன் சென்றார். அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும், உக்ரைன் மறு கட்டமைப்பு தொடர்பான கூட்டம் இத்தாலியில் அடுத்தாண்டு நடைபெறுவது குறித்தும், இருவரும் விவாதித்தனர்.
மேலும் உக்ரைன் போரை முடிவுக்கு வருவதில் இந்தியா - சீனா முக்கிய பங்குவகிக்க வேண்டியது அவசியம், இதற்கு தாம் முழுமையான ஆதரவு அளிப்பதாக மெலோனி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.