sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மியான்மரின் முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

/

மியான்மரின் முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

மியான்மரின் முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

மியான்மரின் முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு


ADDED : மே 19, 2024 11:47 PM

Google News

ADDED : மே 19, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: மியான்மரின் மேற்கு மாகாணமான ரக்கைனில் உள்ள நகரத்தை, இன ஆயுதக்குழுவான அராக்கன் படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவித்து உள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ அரசுக்கு எதிராக உள்ளூர் இனக்குழுவினர் பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ரக்கைன் என்ற மாகாணத்தில் உள்ள புதிடாங் என்ற நகரத்தை அவர்கள் கைப்பற்றியதாகவும், அங்குள்ள அனைத்து ராணுவ புறக்காவல் நிலையங்களையும் கைப்பற்றியதாகவும் நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர்.

அவர்கள் அந்த நகருக்கு தீ வைத்ததாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் தெரிவித்த குற்றச்சாட்டை ஆயுதக்குழு மறுத்துள்ளது. கைப்பற்றப்பட்ட நகரம், வங்கதேச எல்லையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us