என்னா அடி… என்னா அடி: கூகுளை அடித்துத் துவைத்து துாக்கில் தொங்க விட்டது அமெரிக்க கோர்ட்!
என்னா அடி… என்னா அடி: கூகுளை அடித்துத் துவைத்து துாக்கில் தொங்க விட்டது அமெரிக்க கோர்ட்!
ADDED : ஆக 06, 2024 07:56 AM

வாஷிங்டன்: 'கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது,' என அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தெரிவித்தார்.
ஆன்லைன் தேடலில், கூகுள் நிறுவனம் 90 சதவீதத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்க, சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2020ல் கூகுள் மீது அமெரிக்க நீதித்துறை வழக்குத் தொடர்ந்தது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முக்கிய வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வழக்கு ஓராண்டுக்கும் மேலாக, நிலுவையில் இருந்தது. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க நீதிபதி அமித் மேத்தா தீர்ப்பு அளித்தார்.
சட்டவிரோதம்!
அவர் அளித்த 277 பக்கம் கொண்ட, தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கூகுள் தேடுபொறியானது போட்டிகளை தடுக்கவும், ஏகபோக உரிமையைப் பேணுவதற்கும் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம், தேடல் சேவையில் ப்ரவுசரில் 90 சதவீதத்தையும், மொபைல்களில் 94.9 சதவீதத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஸ்மார்ட் போன்களிலும், பிரவுசர்களிலும் தனது தேடுபொறி, 'டிபால்ட்' ஆக நிறுவப்படுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் அள்ளிக்கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு தொடர்வோம்!
இதனால் கூகுள் மற்றும் அதன் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக, கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.