இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்த அமெரிக்க அரசு
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்த அமெரிக்க அரசு
ADDED : மே 01, 2024 04:31 PM

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா கொலம்பியா பல்கலையின் பிரதான கட்டடத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய 900க்கும் மேற்பட்ட மாணவர்களை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு வாரங்களாக காசா மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டம் தொடர்ந்தது.
கொலம்பியா பல்கலையின் பிரதான கட்டடத்தை கைப்பற்றி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைக்க போலீசார் கடும் முயற்சி செய்தனர். போராட்டம் நடத்திய 900க்கும் மேற்பட்ட மாணவர்களை நியூயார்க் போலீசார் கைது செய்தனர். ஹாமில்டன் கட்டடத்தில் பறக்கவிடப்பட்டிருந்த அமெரிக்க கொடியை அகற்றி பாலஸ்த்தீன கொடியை பறக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.