sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி இல்லை: எச்சரிக்கிறார் பைடன்

/

ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி இல்லை: எச்சரிக்கிறார் பைடன்

ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி இல்லை: எச்சரிக்கிறார் பைடன்

ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி இல்லை: எச்சரிக்கிறார் பைடன்

3


ADDED : மே 09, 2024 11:10 AM

Google News

ADDED : மே 09, 2024 11:10 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்காசியாவில் உள்ள இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக் கொண்டு வர தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. கெய்ரோவில் இரு தினங்களுக்கு முன் நடந்த கடைசி பேச்சில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. போர் நிறுத்தப்பேச்சு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், காசாவில் உள்ள ரபா எல்லைப் பகுதியை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்தன.

அங்கு ஹமாஸ் படையினர் இருப்பதாக சந்தேகிக்கும் பகுதிகளை குறிவைத்து குண்டு வீசினர். இதில், ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 23 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரபாவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் படைகள் தயாராக உள்ளன. இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியை கைப்பற்றினால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. ரபாவில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us