sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

/

மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

மொரீஷியசில் மருத்துவமனை: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

9


UPDATED : ஜூலை 18, 2024 10:28 AM

ADDED : ஜூலை 18, 2024 04:36 AM

Google News

UPDATED : ஜூலை 18, 2024 10:28 AM ADDED : ஜூலை 18, 2024 04:36 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர்ட் லுாயிஸ்: மொரீஷியசில், நம் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட நவீன மருத்துவமனையை, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.

ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள தீவு நாடான மொரீஷியசுக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டின் பிரதமர் பிரவீன் ஜெகன்னாத் அவரை வரவேற்றார்.

அதன்பின் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் சாஹர் திட்டத்தை முன்னெடுத்து செல்வது பற்றியும், ஆப்ரிக்க நாடுகளின் வளர்ச்சியை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், மொரீஷியசின் கிராண்ட் பைஸ் என்ற பகுதியில் நம் நாட்டின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில், எங்கள் நாட்டின் பங்களிப்பும் இருப்பதை எண்ணி, பெருமைக்கொள்கிறேன். இது, இருநாடுகளுக்கு இடையிலான நட்பின் புதிய வெளிப்பாடு,'' என்றார்.






      Dinamalar
      Follow us