sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அதிகாரி எச்சரிக்கை

/

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அதிகாரி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அதிகாரி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அதிகாரி எச்சரிக்கை


ADDED : மே 29, 2024 03:43 AM

Google News

ADDED : மே 29, 2024 03:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன் : பப்புவா நியூ கினியாவில், நிலச்சரிவால் 2,000 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும், நோய் தொற்று பரவுவதற்கான அபாயமும் இருப்பதாக, ஐ.நா., அதிகாரி எச்சரித்துள்ளார்.

தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில், எங்கா மாகாணத்தில், கடந்த 24ல் கனமழை பெய்தது. இதனால், அந்த மாகாணத்தில் உள்ள மலை கிராமமான எம்பாலியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கிராம மக்கள் துாங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில், 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்பதால், எம்பாலி கிராமத்தில் மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பப்புவா நியூ கினியாவில் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் நேற்று கூறியதாவது:

நிலச்சரிவு ஏற்பட்ட எம்பாலி கிராமத்தில், தரை மற்றும் இடிபாடுகளுக்கு இடையில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குப்பைக் கூளமாகவும் அப்பகுதி காட்சி அளிக்கிறது.

இந்தப் பகுதியில் ஈரப்பதத்துடன் காணப்படும் குப்பை மற்றும் இடிபாடுகள் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன. இவை வேகமாக நகர்ந்தால், மற்ற கிராமங்கள் மீது விழும். இது, மற்றொரு நிலச்சரிவுக்கு வழிவகுக்கும். இதனால் முன்னெச்சரிக்கையாக, 8,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

எம்பாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இடிபாடுகளில் உடல்கள் சிக்கியுள்ள நிலையில், தண்ணீர் பாய்ந்து வருவதால், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us