கார்கில் தாக்குதல் தவறு தான்; ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரிப்
கார்கில் தாக்குதல் தவறு தான்; ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரிப்
ADDED : மே 28, 2024 11:11 PM

இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான்; கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றஉத்தரவுப்படி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.பின்னர் இங்கிலாந்து சென்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பினார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் கட்சியின் தலைவராக தேர்வான நவாஸ் ஷெரீப்,இந்திய பிரதமர் வாஜ்பாய் உடன் மேற்கொண்ட லாகூர் ஒப்பந்தத்தை மீறி கார்கில் தாக்குதல் நடத்தியது தவறுதான் என ஒப்புக்கொண்டார்.