sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

/

கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

கனடாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 5 பேர் கவலைக்கிடம்

2


ADDED : ஜூன் 04, 2025 09:21 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 09:21 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: கனடாவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கனடா உள்ள டொராண்டோவில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நேற்றிரவு 8:40 மணியளவில், யார்க்டேல் அங்காடிக்கு தெற்கே உள்ள ப்ளெமிங்டன் வீதி அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.வன்முறை எதனால் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? என்ற விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து டொராண்டோ மேயர் ஒலிவியா சோவ் கூறியதாவது: மிக பரபரப்பான இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். சம்பவ இடத்தில் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்ட மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், என்றார்.






      Dinamalar
      Follow us