sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக காசாவில் 10 மணி நேரம் போர் நிறுத்தம்

/

நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக காசாவில் 10 மணி நேரம் போர் நிறுத்தம்

நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக காசாவில் 10 மணி நேரம் போர் நிறுத்தம்

நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக காசாவில் 10 மணி நேரம் போர் நிறுத்தம்


ADDED : ஜூலை 27, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசா: பாலஸ்தீனத்தின் காசாவில் மக்கள் அடர்த்தி மிக்க மூன்று பகுதிகளில் மக்கள் உணவின்றி பட்டினியால் தவிப்பதால் அங்கு நாள்தோறும், 10 மணிநேர சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து காசாவை முழுமையாக மீட்கும் முயற்சியில் மேற்காசிய நாடான இஸ்ரேலின் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

உணவு தட்டுப்பாடு இந்த தாக்குதலில் இதுவரை பயங்கரவாதிகள், பொது மக்கள் என 60,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் போரால் மக்கள் உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர்.

ஐ.நா., அமைப்பின் வாயிலாக முன்னர் உணவு, மருந்து, குடிநீர் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டன. தினசரி நுாற்றுக்கணக்கான டிரக்குகளில் இவை வந்தன.

இவற்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் திருடிச் செல்வதாக குற்றஞ்சாட்டி அந்த நிவாரண டிரக்குகள் வருவதற்கு இஸ்ரேல் தடை விதித்தது.

அதன் பின் மே மாதம் முதல், அமெரிக்காவில் பதிவு செய்த காசா மனிதாபிமான அறக் கட்டளை மூலம் நான்கு மையங்கள் அமைத்து உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப் படுகின்றன. இந்த முறையில் தினசரி 65 டிரக்குகள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன.

நிவாரணம் கிடைக்காதவர்கள் இஸ்ரேல் படைகளிடம் மோதும் போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த மே முதல் இதுவரை இதுபோன்ற தாக்குதல்களில் காசாவை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அழுத்தம் இந்நிலையில், போதிய உணவு கிடைக்காமல் காசாவில் பட்டினி பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மக்கள் அடர்த்தி நிறைந்த மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

மேலும், காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.






      Dinamalar
      Follow us