sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் போதாது: 'டெலிகிராம்' நிறுவனர் புது 'ஆபர்'

/

விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் போதாது: 'டெலிகிராம்' நிறுவனர் புது 'ஆபர்'

விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் போதாது: 'டெலிகிராம்' நிறுவனர் புது 'ஆபர்'

விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் போதாது: 'டெலிகிராம்' நிறுவனர் புது 'ஆபர்'


ADDED : டிச 26, 2025 01:48 AM

Google News

ADDED : டிச 26, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: 'டெலிகிராம்' சமூக வலைதள நிறுவனரான பாவெல் துரோவ், தன் விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றால், முழு மருத்துவ செலவை ஏற்பதுடன், சொத்திலும் பங்கு தருவதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், 41. இவரது சொத்து மதிப்பு, 1.52 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. துரோவுக்கு மூன்று மனைவியர் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளனர்.

இதுதவிர, விந்தணு தானம் செய்ததன் மூலம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தன் சொத்தில் சம பங்கு கிடைக்கும் என்று துரோவ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தை பிறப்பை அதிகரிக்க புதிய அறிவிப்பு ஒன்றையும் அவர் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி தன் விந்தணுவை பயன்படுத்தி, குழந்தை பெறும், 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, முழு மருத்துவ செலவையும் தானே ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார்.

உலக அளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால், சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு இத்தானத்தை துவங்கியதாக துரோவ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us