தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி

பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி

பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி


ADDED : ஆக 26, 2026 11:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 11:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் உள்ள மருத்துவமனையில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தலைநகர் இஸ்லமாபாத்தில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், பிரசவ வார்டில் உள்ள ஏசி கம்ப்ரசர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீ, அறையின் மற்ற பகுதிகளுக்கு உடனடியாக பரவியது. இதனால், தீ மற்றும் நச்சுப்புகை அதிகளவில் வெளியேறியது.

இதில், பிரசவ வார்டில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 16 பச்சிளம் குழந்தைகளில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டது. எஞ்சிய 15 குழந்தைகள் தீ மற்றும் நச்சுப்புகையினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் உதவி ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us