பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் வீரர்கள் உட்பட 16 பேர் பலி
பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் வீரர்கள் உட்பட 16 பேர் பலி
ADDED : பிப் 18, 2026 01:34 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், மறுபக்கம் ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பாக்., - ஆப்கன் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பஜவூர் மாவட்டம் மலங்கியில் உள்ள சோதனை சாவடி மீது வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்றை மோதி வெடிக்கச் செய்தனர். இதில் செக் போஸ்ட் முழுதும் தரைமட்டமானது. அருகிலிருந்த மதரஸா கட்டடமும் முற்றிலும் இடிந்து விழுந்தது.
டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட, 16 பேர் உயிரிழந்தனர்.

