sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

/

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

6


UPDATED : ஜூன் 28, 2025 03:53 PM

ADDED : ஜூன் 28, 2025 03:36 PM

Google News

UPDATED : ஜூன் 28, 2025 03:53 PM ADDED : ஜூன் 28, 2025 03:36 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 வீரர்கள் மற்றும் 19 மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ கான்வாய் மீது இன்று, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான். இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில், அங்கிருந்த 6 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஆறு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தெஹக்ரீக் ஐ தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us