ஜெர்மன் மொழியை கற்கும் இரண்டரை லட்சம் இந்தியர்கள்; ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் புகழாரம்
ஜெர்மன் மொழியை கற்கும் இரண்டரை லட்சம் இந்தியர்கள்; ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் புகழாரம்
UPDATED : ஜன 13, 2026 07:37 PM
ADDED : ஜன 13, 2026 06:38 PM

பெர்லின்: இந்தியாவில் ஜெர்மன் மொழியை கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் கற்கின்றனர் என்று ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் பெருமிதத்துடன் புகழாரம் சூட்டி உள்ளார்.
ஜன.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் இந்தியா வந்தார். அவரின் இந்த அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இந்தியா-ஜெர்மனி கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
ஜெர்மனி வழியாக வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் பயணிக்கும் இந்தியர்களுக்கு ஜெர்மனி விசா தேவையில்லை என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுற்றுப்பயணம் முடிந்து விட்ட நிலையில், பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தமது எக்ஸ் பக்கத்தில் கூறி உள்ளதாவது;
இந்தியாவில் இரண்டரை லட்சம் பேர் ஜெர்மன் மொழியைக் கற்கிறார்கள். அதிக ஜெர்மனி விசாக்களை வழங்கும் இடம் பெங்களூருவை போல் உலகில் வேறு எந்த நகரமும் இல்லை.
மொழி, வேலை மற்றும் கருத்து பரிமாற்றங்கள் மக்களை இணைக்கிறது. இது நம் இரு பொருளாதாரங்களுக்கும் பயனளிக்கும் மற்றும் நமது நாடுகளின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பு.
இவ்வாறு அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

