sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்

/

வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் மீண்டும் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்

25


UPDATED : டிச 21, 2024 02:43 PM

ADDED : டிச 21, 2024 09:01 AM

Google News

UPDATED : டிச 21, 2024 02:43 PM ADDED : டிச 21, 2024 09:01 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்க தேசத்தில் 3 ஹிந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய 27 வயதான வாலிபர் அலல் உதின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆக., 5ல், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா தப்பியோடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன. மேலும், ஹிந்து கோவில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், மீண்டும், கடந்த 2 நாட்களில் 3 ஹிந்து கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப் பட்டு உள்ளன.

* தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் உள்ள 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

* பீல்தோரா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

* ஷாகுவாய் பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் 2 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் பொலஷ்கந்தா கிராமத்தில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் அலல் உதின் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையின் போது, உதின் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

'இது போன்ற செயலை நாங்கள் இங்கு பார்த்ததில்லை. தற்போது முதல்முறையாக நடந்துள்ளது. சிலைகளை சேதப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என கோவில் கமிட்டி தலைவர் ஜனார்தன் ராய் வலியுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us